Mahashivratri 2024: சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் மாதா மாதம் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் சிவராத்திரிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு மகா சிவரத்திரியில் சர்வார்த்த சித்தி யோகம், சித்தி யோகம், சிவ யோகம் ஆகிய 3 செல்வாக்குமிக்க மங்களகரமான யோகங்களின் மகா சங்கமம் நடக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த தினத்தில் அவிட்ட நட்சத்திரம் இருக்கின்றது. அவிட்டத்தின் அதிபதி செவ்வாய். ஆகையால் இந்த சிவ ராத்திரியில் சிவ பெருமானை பூஜிப்பவர்களுக்கு செவ்வாய் தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். செவ்வாய் தோஷத்தால், திருமணமாகாமல் உள்ளவர்கள் மகா சிவராத்திரியன்று சிவ பெருமானுக்கு உகந்த பூஜைகளை செய்து வணங்கினால், விரைவில் திருமணம் நிச்சயம் அகும். செவ்வாய் மட்டுமின்றி இந்த சிவராத்திரி சனி பகவானுக்கும் உகந்ததாக உள்ளது. பொதுவாகவே சிவ பெருமானை வணங்குபவர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. அவர்கள் மீது விசேஷ அருளை பொழிகிறார். சிவ பக்தர்களுக்கு ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சி காலங்களில் பிரச்சனைகளை குறைத்துக்கொடுக்கிறார். இந்த மகா சிவராத்திரியன்று அமையும் சுப யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு சிவ பெருமான் மற்றும் சனி பகவானின் விசேஷ அருள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் சிவராத்திரி முதல் பல சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம். 


மேஷம் (Aries)


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சிவராத்திரி முதல் சிவபெருமானுடன் சனி பகவானின் அருளும் சேர்த்து கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த அனைத்து பணிகளும் இப்பொழுது நடந்து முடியும். பணியிடத்தில் தாமதமான பதவி உயர்வு இப்போது கிடைக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களுக்கு இப்பொழுது வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்


ரிஷபம் (Taurus)


ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நகைகளை வாங்கும் யோகம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது. திருமணம் ஆகாத ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: இந்த ராசிகளுக்கு பண வரவு, ராஜ பொற்காலம் ஆரம்பம்


துலாம் (Libra)


துலாம் ராசிகாரர்களுக்கு சிவராத்திரிக்குப் பிறகு சனி பகவானின் விசேஷ அருள் கிடைக்கும். உங்கள் பணியிடத்திலும், வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் பண வர அதிகமாகும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே உறவு மேம்படும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு இப்போது வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்


மகரம் (Capricorn)


மகர ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி அற்புதமாக நற்பலன்களை கொண்டு வரும். பணியிட்டத்தில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணவரவு அதிகமாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.


கும்பம் (Aquarius)


கும்ப ராசிக்காரர்கள் மீது சனி பகவான் மற்றும் சிவ பகவானின் விசேஷ அருள் இருக்கும். புதிய வர்த்தகத்தை துவங்க இது நல்ல நேரமாக இருக்கும். பலவித முதலீடுகளை இப்பொழுது செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  


மேலும் படிக்க | 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி! ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ