கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி: நவகிரகங்களில், கிரகங்களின் தளபதியான செவ்வாய் விரைவில் ராசியை மாற்றப் போகிறார். தைரியம், வீரம், ஆற்றல், பூமிக்காரகர் என்று பெயர் பெற்றவர் என பல வீரபிரதாபங்களை உடைய செவ்வாய் கிரகம், சகோதரர்கள், போர், ராணுவம் போன்றவற்றின் காரணியாக விளங்குபவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் கிரகம் அசுப கிரகம் என்றாலும், அவர் தனித்திருந்தால் தோஷம் கிடையாது. அவர் பாவ கிரகங்களான ராகு, கேது மற்றும் சனியுடன் சேர்ந்தால் தான் தோஷமாகும்.. பொதுவாக சனியுடன் சேர்ந்த செவ்வாயால் ஏற்படும் தோஷம் மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கும்.  செவ்வாய்தோஷம் என்பது, சுப கிரகங்களின் தொடர்பு ஏற்படும் போது தோஷத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல, செவ்வாயுடன் ராகு சேர்ந்தால், மாங்கல்ய தோஷம் ஏற்படும். அதற்கு ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி பூஜை செய்தால் நிவர்த்தி கிடைக்கும். அதேபோல, கேதுவும் செவ்வாய் இணைந்தால், ஏற்படும் செவ்வாய் தோஷம் பூமி சம்பந்தமான வில்லக்கங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்..


கடந்த மாதம் 30ம் தேதியன்று செவ்வாய் கிரகம் நட்சத்திரத்தை மாற்றினார். புனர்பூச நட்சத்திரத்தில் இருக்கும் செவ்வாய் கிரகம், தற்போது, மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 


ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் இயங்கிக் கொண்டே இருப்பதால், அவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களது ராசியை மாற்றிக் கொள்கின்றன. அதில் சில பெயர்ச்சிகளின் பலன் சுபமாகவும், சிலவற்றின் பலன் அசுபமாகவும் இருக்கும். இன்னும், 8 நாட்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கிரகம், கடக ராசிக்கு பெயர்ச்சிவதன் தாக்கம் 3 ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். இந்த 3 ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்...


மேலும் படிக்க | நவராத்திரியில் சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை போன்ற வழிபாடுகள் இந்த நவீன யுகத்தில் அவசியமா?


மேஷம்
செவ்வாயின் ராசி மாற்றம், மேஷ ராசியினருக்கு சாதகமாக அமையும். வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சாதகமாக நேரம் இது. செவ்வாய்ப் பெயர்ச்சியால், உங்கள் பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான கால கட்டம் இது. சம்பள உயர்வு, உத்தியோக உயர்வுக்கு வாய்ப்புண்டு.


துலாம்
செவ்வாயின் சஞ்சாரம், துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். நிதி நெருக்கடியில் இருப்பவர்கள், ஆசுவாசமாக செலவு செய்ய நினைக்கும் அளவுக்கு வருமானம் வந்து சேரும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உறவுகள் முன்பை விட வலுவாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.


கும்பம்
செவ்வாயின் கடக ராசி மாற்றம், கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள், வெயிலைக் கண்ட பனி போல் மறையும். காதல், திருமணம், உறவுகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, பதவி உயர்வு, சம்பளம் கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வாரம் ஓஹோன்னு இருக்கும்! உங்க ராசி என்ன? ராசிபலன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ