கிரகம் ராசி பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் ராசியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாற்றும். ஒவ்வொரு மாதமும் சில கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது மார்ச் மாதம் தொடங்கி 9 நாட்கள் முடிந்துள்ளது. இந்த மாதம் நான்கு பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் செய்யயுள்ளது. இது சிலருக்கு கஷ்டங்களை தரக்கக்கூடும். இந்த மாதத்தில் செவ்வாய் முதலில் மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதன்பின் சுக்கிரன் மேஷ ராசியிலும், சூரியன் மீன ராசியிலும் மார்ச் 15ல் இடப் பெயர்ச்சியாகுகிறார். இறுதியில், புதன் மீன ராசியிலும் நுழைவார். இதுபோன்ற சூழ்நிலையில், 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதகமான விளைவுகள் ஏற்படும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை அறிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு 4 கிரகங்களின் பெயர்ச்சி சாதகமற்ற பலனை தரும்


மேஷம்
ஜோதிடத்தின் படி, மார்ச் மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி மேஷ ராசியினரை மோசமாக பாதிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் போது, ​​மன உளைச்சல், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் போன்றவை நேரிடும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மென்மையாக இருக்கும். குழந்தை கஷ்டப்பட வேண்டியிருக்கும். கர்ப்பிணிப் பெண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்! ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!


கடகம்
ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். மார்ச் மாதம் டென்ஷன் நிறைந்ததாக இருக்கும். தொழில் சம்பந்தமாக பல பிரச்சனைகள் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், பணியிடத்தில் முதலாளியின் நம்பகத்தன்மையை தக்க வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதே சமயம் உடல் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.


துலாம்
மார்ச் மாதத்தில் இந்த ராசிக்காரர்களு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துலாம் ராசிக்காரர்களுக்கு காயம், விபத்து போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த நேரம் கடினமாக அமையும். வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்.


மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சி அசுப பலன்களை ஏற்படுத்தும். சில துக்க செய்திகளை பெறுவீர்கள். பண விரயத்துடன் உடல் நலமும் பாதிக்கப்படும். பொருளாதார நிலை பாதிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நிதானத்துடன் செயல்படவும். வாக்குவாத சூழ்நிலை உருவாகலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள், இல்லையெனில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 700 ஆண்டுக்கு பிறகு உருவான 5 ராஜயோகம், இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ