சனி பகவானுக்கும் செவ்வாய்க்கும் இடையே, நாளை, ஜூலை 13 சனிக்கிழமை, ஏற்படும் இணைவு சில அசுப பலன்களை உருவாக்கும். பரஸ்பரம் இருவரும் இணைந்து சதுர்தசம் யோகத்தை உருவாக்குகிறார்கள். இதனால், ​​கும்பம், மேஷம் உள்ளிட்ட சில ராசிக்காரர்கள் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சில காரணங்களால், திடீர் பண இழப்பு ஏற்படலாம் அல்லது உத்தியோகத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். இந்த அசுப யோகத்தில், மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பு காணப்படும். இதையெல்லாம் தவிர்க்க, உங்களுக்கு நிச்சயமாக நிவாரணம் அளிக்கக்கூடிய சில பயனுள்ள பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான தொல்லைகளும் விலகி, தடைகள் நீங்கும். சனிக்கிழமைகளில் ஒருவேளை உணவருந்தி, கோயிலுக்கு சென்று சனீஸ்வரரையும், நவகிரகங்களையும் வணங்கி ஏழைகளுக்கும் அன்னதானம் செய்ய வேண்டும்


சிவபெருமானை வணங்குதல்


சனி பகவான் சிவபெருமானின் சிறந்த பக்தரகாக கருதப்படுகிறார். சனிபகவானின் அருள் பெற சனிக்கிழமையன்று சிவனை வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமை காலை, குளித்து, சுத்தமான ஆடை அணிந்து சிவன் கோயிலுக்குச் சென்று ஜலாபிஷேகம் செய்து வழிபடுங்கள். கோயிலில் அமர்ந்து சனி ஸ்தோத்திரம் சொல்லி வழிபடவும். 


சனி மந்திரத்தை ஜபிக்கவும்


சனிக்கிழமையன்று, ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ச: ஷனைஶ்சராய நம, ஓம் ஷாம் சனிச்சராயை நம என்ற சனியின் மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இதனுடன், சிவலிங்கத்தை பூஜிக்கவும். சிவபெருமானையும், ராம பக்தனான ஹனுமானையும் வணங்குபவர்களை, சனிதேவர் எந்தத் தீங்கும் இழைக்காமல் இருப்பார். அதோடு, சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று நவக்கிரக சன்னதியில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் இட்டால் தொல்லைகள் குறையும் .


மேலும் படிக்க | இஷ்டப்பட்டு கஷ்டப்பட வைக்கும் ராகு! கஷ்டத்தை கொடுத்து வாழ்க்கையை உணர்த்தும் நிழல் கிரகம்!


சனி சாலிசா பாராயணம் செய்தல்


சனி தேவரின் அருளைப் பெற, சனிக் கிழமையில் சனி சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் பாராயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதனால் சனி தேவன் மகிழ்ச்சியடைந்து வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை நீக்குகிறார். சனிதேவரின் அருளைப் பெற்றாலே, அனைத்து பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.


தீபம் ஏற்றி பரிகாரம் செய்தல்


சனிபகவானுக்கு தீபம் ஏற்றி பரிகாரம் செய்வதன் மூலம், வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். சனீஸ்வரனின் அருளைப் பெற எப்போதும் நல்லெஎண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். சனிபகவானுக்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. இதனால் சனி தேவர் மனம் குளிர்ந்து, பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிப்பார்.


எள் எண்ணெய் தானம்


சனிக்கிழமை எள் எண்ணெய், அதாவது நல்லெண்ணெய் தானம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. 1.25 கிலோ எள் எண்ணெயை ஒரு ஏழைக்கு தானம் செய்வதன் மூலம், புண்ணியம் கிடைக்கும். மேலும் சனிதேவர் உங்கள் செயலால் மகிழ்ச்சி அடைவார். இதை தானம் செய்வதால் உங்கள் அசுப நிலை நீங்கி வீட்டில் செழிப்பு அதிகரிக்கும்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | ராணுவ வீரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்? வீரத்தை தரும் அங்காரகர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ