சுக்கிரன் இன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார். நவகிரகங்களின் இயக்கத்தின் அடிப்படையில், ஜாதக பலன்கள் கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொருவரின் பிறந்த நேரம், இடம், ஊர், பெற்றோர்கள் என பல விஷயங்களின் அடிப்படையில் ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஒருவரின் ஜாதகம் தான் ராசி, லக்னம், நட்சத்திரம் என அனைத்தையும் முடிவு செய்யும். கிரகங்களின் பெயர்ச்சியின் பலன்களும் ஜாதகத்தின் அடிப்படையில் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், ஜாதகர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் சொல்லும் பலன் துல்லியமானது என்றாலும், ராசி அல்லது நட்சத்திரத்தில் கிரகங்கள் சஞ்சார மாற்றம் அதாவது பெயர்ச்சி அடையும்போது பொதுவான பலன்கள் சொல்லப்படுகின்றன. அதன் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சி பலன்களைப் பார்ப்பது அனைவரின் வழக்கமாகவே மாறிவிட்டது.


சுக்கிரன் பெயர்ச்சி


இன்று சுக்கிரனின் பெயர்ச்சியால், துலாம் ராசியில் உருவாகியிருந்த லக்ஷ்மி நாராயண யோகம் முடிவுக்கு வந்தது.


மேலும் படிக்க | 4 ராசிக்காரர்களின் வெற்றிக்கு வித்தாகும் சுக்கிரன் பெயர்ச்சி! விருச்சிகத்திற்கு மாறிய வெள்ளி கிரகம்!


லக்ஷ்மி நாராயண யோகம்


இதற்கு முன்னதான சுக்கிரன் பெயர்ச்சி செப்டம்பர் 18, 2024 அன்று நடைபெற்றது. அப்போது, சுக்கிர பகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைந்தார். அதன் பிறகு, புதன் அக்டோபர் 10, 2024 அன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். இவ்வாறு, துலாம் ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் ஒன்றாக இருந்தபோது,  லக்ஷ்மி நாராயண யோகம் உருவானது.


முடிவுக்கு வந்த லக்ஷ்மி நாராயண யோகம்


இன்று, அதாவது அக்டோபர் 13 அன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியடைந்ததால், புதனும், சுக்கிரனும் வெவ்வேறு ராசிகளுக்குள் சஞ்சரிக்கின்றனர். இருவரும் ஒரே ராசி வீட்டில் இருந்தபோது இருந்த தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுவிட்டதால், லக்ஷ்மி நாராயண யோகமும் முடிவுக்கு வந்துவிட்டது.


துலாம் ராசியில் உருவான புனித ராஜயோகம் கன்னி, சிம்மம், துலாம், மீனம் ஆகிய நான்கு ராசிகளுக்கு அட்டகாசமாக இருந்த நிலையில், இன்று முதல் அந்த 4 ராசிகளுக்கான யோகம் முடிவுக்கு வந்துவிட்டது. புதனும் சுக்கிரனும் சேர்ந்ததால் உருவான நற்பலன்களினால் மகிழ்ச்சியை அனுபவித்து வந்த 4 ராசிகளும் தற்போது கொஞ்சம் கஷ்டப்படலாம்.


மேலும் படிக்க | கலைமகள் சரஸ்வதியின் கடாட்சத்தை பூரணமாக பெற அறிவுத்தேடல் தொடங்கும் விஜயதசமி நாள்!


சுக்கிரன் தற்போது விருச்சிகத்தில் இருக்கும் நிலையில், புதன் மீண்டும் அவருடன் எப்போது சேர்வாரோ, அப்போது மீண்டும் இதே யோகம் உருவாகும்.  லக்ஷ்மி நாராயண யோகம் முடிவுக்கு வந்ததால், அதாவது, புதனும் சுக்கிரனும் பிரிந்ததால் தற்போது நல்ல நேரத்திற்கு வந்த ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


மேஷம் (Aries Zodiac Sign) - புதன் சுக்கிரன் பிரிந்ததால், மேஷ ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனைகள் தீரும். சுக்கிரன் விருச்சிகத்தில் இருப்பதால், அன்னை லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகள் மேஷ ராசியினருக்குக் கிடைக்கும்.


ரிஷபம் (Taurus Zodiac Sign) - சுக்கிரனின் பெயர்ச்சி, ரிஷப ராசிக்காரர்களுக்கு முதலீடு மூலம் நல்ல லாபத்தையும், பணவரத்தையும் கொடுக்கும். ஆனால் சில சுப செலவுகளும் ஏற்படலாம். எனவே வாகனம் வாங்க இதுவே உகந்த நேரம்.


மிதுனம் (Gemini Zodiac Sign) - மிதுன ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருளை அள்ளித் தரும் சுக்கிரனின் பெயர்ச்சியால், கடந்த சில நாட்களாக இருந்த அலைச்சல் முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல்களில் சாதகமாக முடிவுகளை பெறுவீர்கள். 


மேலும் படிக்க | வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ