சூர்யா-குரு சேர்க்கை 2023 பலன்: வேத ஜோதிடத்தின்படி, ஏப்ரல் 14 அன்று சூரியன் மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்தார். மறுபுறம் ராகு ஏற்கனவே இங்கே அமர்ந்திருக்கிறார். இது தவிர ஏப்ரல் 22ம் தேதி குரு பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்க உள்ளது. அந்த வகையில் சூரியனுடன் குரு சேர்க்கை ஒரு பெரிய தற்செயல் நிகழ்வை உருவாக்குகிறது. இந்த இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்களின் சந்திப்பு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் குரு இணைவதால் நன்மைகள் உண்டாகும்


மேஷ ராசி
இந்த ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கை நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும், அதன் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். இதனுடன் வியாபாரத்திலும் லாபம் காணப்படும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். கடனில் இருந்து விடுதலை கிடைக்கும்.


மேலும் படிக்க | அட்சய திரிதியை இந்தாண்டு எப்போது வருது? நல்ல நேரம் எப்போது?


மிதுன ராசி
இந்த ராசிக்கு 11ம் வீட்டில் சூரியன் குரு சேர்க்கை நடக்கப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவடையும். மேலும், புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை இக்காலத்தில் முடிக்க முடியும்.


கடக ராசி
ஜோதிடத்தின்படி, இந்த ராசியின் பத்தாம் வீட்டில் சூரியன் மற்றும் குரு இணைவு நடைபெறப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்திலும் அமோக வெற்றியைப் பெறுவீர்கள். இந்த நேரம் வணிக வகுப்பினருக்கும் சாதகமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.


மீன ராசி
பத்தாம் இடமான மீனத்தில் சூரியன் மற்றும் குரு சேர்க்கை, இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாகும். இதனுடன், உங்கள் தொழிலிலும் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட பணிகளை முடிக்க முடியும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அக்ஷய திருதியையில் உருவாகும் 7 யோகங்கள்! 3 மடங்கு பலன் கொடுக்கும் பரிகாரங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ