செவ்வாய் ராசி மாற்றம்: வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. ஒரு நபரின் ஜாதகத்தில் மூன்றாவது, ஆறாம் மற்றும் பத்தாம் வீட்டின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால், ஒரு நபர் தைரியம், வலிமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை பெறுகிறார். இந்துமத ஜோதிடத்தின் படி, நவம்பர் 1 ஆம் தேதி, செவ்வாய் வக்ர நிலையில் ரிஷப ராசியில் நுழைவார். செவ்வாயின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் இருக்கும். எனினும், நான்கு ராசுக்காரர்களுக்கு, பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயின் மாற்றத்தால் சிக்கலை சந்திக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்:


மேஷம்:


மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். செவ்வாய் இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் அதாவது பேச்சாற்றல் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.  இந்த சஞ்சாரத்தின் காரணமாக உங்கள் பேச்சில் கடுமையும் கசப்பும் அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் தகராறு ஏற்படலாம். திடீர் பண இழப்பு ஏற்படலாம். மிகுந்த ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது.


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் மற்றும் கடன் வீட்டிற்கு அதாவது 11 மற்றும் 6 ஆம் வீட்டிற்கு அதிபதியாக செவ்வாய் கருதப்படுகிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாவது, ஆறாம் மற்றும் ஏழாவது வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் உங்கள் உடன்பிறப்புகளுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். முதலீடு செய்வதற்கு இந்த நேரம் சாதகமாக இல்லை. ஆகையால் முதலீடுகளை இந்த காலத்தில் தவிர்ப்பது நல்லது.


மேலும் படிக்க | சனீஸ்வரரின் வக்ரப் பார்வை எச்சரிக்கை! ஈஸ்வரனையும் விட்டு வைக்காத சனிதேவரின் கோரப்பிடி 


துலாம்:


துலாம் ராசிக்காரர்களுக்கு, செவ்வாய், ஏழாவது மற்றும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். இவர் துலா ராசியில் வக்ர நிலையில் பிரவேசிப்பார். உங்கள் ராசியின் 11, 2 மற்றும் 3 ஆம் ஸ்தானங்களில் செவ்வாயின் முழுமையான பார்வை இருக்கும். செவ்வாயின் நிலை மாறும் இந்த காலத்தில், சில திடீர் இழப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.


மகரம்:


மகர ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் பதினொன்றாம் வீடுகளின் அதிபதியாக செவ்வாய் கருதப்படுகிறார். செவ்வாய் உங்கள் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாயின் பார்வை உங்கள் ராசிக்கு எட்டு, பதினொன்று, பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும். 


இந்த நேரத்தில், உங்கள் குழந்தைகள் மூலம் பிரச்சனைகள் வரக்கூடும். பண விரயம் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும். இந்த காலத்தில் புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவுகளுடன் வாக்குவாதம் வரலாம், இது பெரிய சண்டையில் போய் முடியக்கூடும். ஆகையால், பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியமாகும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்கிர நிவர்த்தி: புதிய ஆண்டில் முதல் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ