புதுடெல்லி: இன்னும் 7 நாட்களுக்குப் பிறகு, சூரியன்-சுக்கிரன் இணைவதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கை செல்வச் செழிப்புடன் நிறைந்திருக்கும்! சுக்கிரன் கிரகம் ஆகஸ்ட் 31, 2022 அன்று சிம்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறது. அதே நேரத்தில், கிரகங்களின் அரசர் என்று சொல்லப்படும் சூரியன் இன்னும் தனது சொந்த ராசியான சிம்மத்தில் இருக்கிறார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால், சிம்மத்தில் சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணையும். வெற்றியையும், நம்பிக்கையையும் தரும் கிரகம் சூரியனும், மகிழ்ச்சியையும் அழகையும், ஆடம்பர வாழ்க்கையையும் தரும் கிரகமான சுக்கிரனும் ஒரே ராசியில் சஞ்சரிப்பது விசேஷமானது. இந்த விசேஷமான மாற்றம் அனைவருக்கும் தருவதை விட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ம்கவும் அதிர்ஷ்டமான பலனை அளிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்மத்தில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவிருக்கும் ராசிகள்:


மேலும் படிக்க | கடக ராசியில் இணையும் சுக்கிரன்-சந்திரன்; இந்த ‘3’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!


ரிஷபம்: சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையானது, ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான வசதிகளும் கிடைக்கும். வீட்டுக்கு நிறைய ஷாப்பிங் செய்வார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் பெரும் வெற்றி கிடைக்குக்ம் என்பதால், குடும்ப உறுப்பினர்களும் மகிழ்வார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.


சிம்மம்: சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை நடப்பதால், சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு நல்ல காரியங்கள் கைகூடும், சுப பலன்கள் கிடைக்கும். திடீரென்று நிறைய பணம் வந்து சேரலாம். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும், தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராமல் பெரிய ஆர்டர்கள் வந்து சேரும். மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


மேலும் படிக்க | இந்த ராசிகளின் தலைவிதியை மாற்றி அமைப்பார் சனி பகவான்: பண மழையில் நனைவார்கள் 


துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் இணைவு மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும், பொருளாதார நிலை வலுப்பெறும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய விருப்பங்கள் கண்ணுக்குத் தெரியும். குடும்பத்தில் நெருக்கமானவர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தனியாக இருப்பவர்களுக்கு அவர்களுக்கு உகந்த ஜோடி கிடைக்கும் பாக்கியமும் உண்டு.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் பண மழை, குபேரயோகம்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ