இந்திய பெண்கள் பலர், தங்களது முகத்திற்கேற்ப விதவிதமான மூக்குத்திக்களை அணிவதுண்டு. வளைய வகையில் மூக்குத்தி, பொட்டு வகை மூக்குத்தி என பல வகைகள் உண்டு. சிலர் இரண்டு நாசிகளுக்கும் இடையேயும் மூக்குத்தி போட்டுக்கொள்வர். தமிழ் பெண்களில் பெரும்பாலானோர் வலது பக்கமாக மூக்குத்தி அணிவர். வட இந்தியாவில் பெரும்பாலானோர் இடது பக்கத்தில் மூக்குத்தி அணிவர். அதே போல தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் முத்து, மத்து, கல் வைத்த மூக்குத்திகளை அணிகின்றனர். வட இந்தியாவில் பலர் வளைய வகை மூக்குத்திகளை அணிகின்றனர். ஒருவர் மூக்குத்தி அணையும் வகையை வைத்தே அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி மூக்குத்தி என்பது பெண்களுக்கு மட்டுமல்ல. பல ஆண்களும் மூக்குத்தி அணிகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த வகை மூக்குத்தி அணிந்தாலும் அதை தங்கத்தில் அணிந்தால் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது. தங்க மூக்கத்தியால் முகம் ஜொலிப்பது மட்டுமன்றி, வாழ்க்கையும் சேர்ந்து ஜொலிக்குமாம். தங்க மூக்குத்தி அணிவதால் ஏற்படும் பலன்கள் குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பின் கும்ப ராசியில் சனி.. இந்த ராசிகளுக்கு திடீர் திருப்பம், ராஜயோகம்


கடன் தொல்லை இல்லை..


தங்க மூக்குத்தி அணிவதன் மூலம், முகம் லக்‌ஷனமாவது மட்டுமன்றி வாழ்க்கையிலும் லக்‌ஷ்மியின் அருள் பெருகுமாம். இதனால் கடன் தொல்லையின்றி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என ஆன்மிக ரீதியாக நம்பப்படுகிறது. தங்க மூக்குத்தி அணிபவர்களுக்கு லக்‌ஷ்மியின் அருள் ஆயுள் முழுவதும் இருக்கும் என கூறப்படுகிறது. 


நிதி நிலை:


தங்க மூக்குத்தி அணிபவர்களின் வீட்டில் லக்‌ஷ்மி தேவி ஆனந்தத்துடன் வசிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், இவர்களின் வீட்டில் நிதிக்கு பற்றாக்குறையே வராதாம். பணம் தேவைப்படும் நேரங்களில் தட்டுப்பாடின்றி கிடைக்குமாம். மொத்தத்தில் இவர்களின் நிதி நிலை சுபிட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. 


பிரச்சனைகள் தீரும்..


தங்க மூக்குத்தியை அணிபவர்களின் ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவடையும் என கூறப்படுகிறது. இந்த காரணத்தால், இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து பிரச்ச்னைகளும் தீரும் என்றும், இவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியான சூழல் உருவாகிக்கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இவர்களின் ஜாதகத்தில் உள்ள சந்திரனும் வலுவடையும். இதனால், இவர்களின் வாழ்வில் அமைதி பெருகி, துக்கங்கள் நீங்கும் என கூறப்படுகிறது. 


உடலில் எந்த தங்க ஆபரணம் அணிந்தாலும் அது லக்‌ஷ்மி தேவிக்கு மகிழ்ச்சியளிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக மூக்கில் தங்க மூக்குத்தி அண்வதால் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கி வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளையும் லக்‌ஷ்மி தேவி நீக்குவார் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் சக்திவாய்ந்த அபூர்வ ராஜயோகம், இந்த ராசிகளுக்கு பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ