பெண்களை பற்றி பிரச்சினைக்குரிய வகையில் பேசியதைக் ஹர்திக் பாண்டியா மற்றும் இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் இருவருக்கும் சிக்கல் ஏற்ப்பட்டு உள்ளது. இவர்கள் செய்த செயல்களால், இனி யாரும் அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதில் சிக்கல் ஏற்ப்படலாம் எனத் தெரிகிறது. இவர்கள் இருவரும் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் "காஃபி வித் கரண்" நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அதில் சில கேள்விகள் கேட்டகப்பட்டது. கேள்விகளுக்கு இருவருமே பதில் அளித்தனர். அப்பொழுது பெண்களை பற்றி சில கருத்துகளை வெளியிட்டார் ஹர்திக் பாண்டியா. இவரின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தது. பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் மீது, இந்த விமர்சனங்களுக்கு பிரதிபலிக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. 


இதனையடுத்து, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஹர்திக் பாண்டியா. மேலும் என் பேச்சால் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்நிகழ்ச்சியின் தன்மையினால் அவ்வாறு பேசிவிட்டேன். யாரையும் அவமரியாதை செய்யவோ அல்லது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று கூறியுள்ளார்.


இந்நிலையில், ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் இருவருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறும் கூறியுள்ளது பிசிசிஐ.