நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்று போட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் மட்டும் நன்றாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு தென்னாப்பிரிக்கா அணி 269 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹால் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.


இதனையடுத்து இந்தியா 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய போதிலும் பின்னர் சுதாரித்துக்கொண்ட இந்தியா 45.3-வது பந்தில் 4 விக்கெட் இழப்பில் இலக்கினை எட்டி வெற்றிப்பெற்றது.


இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி 112(119) ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார் அவருக்கு துணையாக ரஹானே 79(89) ரன்களை அடித்து அணிக்கான வெற்றியை உறுதிப் படுத்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகானாக விராத் கோலி தேர்தேடுக்கபட்டார்.


கடைசியாக 2011 -ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது. 7 ஆண்டுகள் கழித்து இந்தியா பெறும் முதல் ஒருநாள் போட்டி வெற்றி இதுவேயாகும். 


இந்த வெற்றியை அடுத்து இந்தியா அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது