இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், விராட் கோலிக்கு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது.


 



 


அதேபோல அஸ்வினுக்கு 'திலீப் சர்தேசாய்' விருது வழங்கப்பட்டது. அஸ்வினுக்கு இந்த விருது வழங்கப்படுவது இது இரண்டாவது முறை. திலீப் சர்தேசாய்' விருதை இரண்டாவது முறை பெறும் முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வினும் பெற்றனர்.