சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி கோப்பையை வென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2-ம் தேதி 22-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலக தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ஸ்பெயின் வீரர் ராபெர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தும், 99-வது இடம் வசிக்கும் ரஷியா வீரர் டேனில் மெட்விதேவும் இறுதிப்போட்டிக்கு நுழைந்தனர்.


1 மணி 13 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பாவ்டிஸ்டா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 28 வயதான பாவ்டிஸ்டா சென்னை ஓபனை வெல்வது இதுவே முறையாகும். 



இதைத் தொடர்ந்து இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, மற்றொரு இந்தியர்களான புராவ் ராஜா- திவிஜ் சரண் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் போபண்ணா கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.