உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், வெள்ளி பதக்கம் வென்ற சாய்னா மற்றும் சிந்துவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:-


உலக பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பரிசுகளை வென்ற பி.வி.சிந்து மற்றும் என்.சாய்னா ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம் என கூறியுள்ளார்.



ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினர், எனினும் இறுதி போட்டியில் அவர் ஜப்பான் வீராங்கனை நொசொமி ஒகுஹராவிடம் போராடி தோல்வி அடைந்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19-21, 22-30, 20-22 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியுற்றார்.


இந்திய பேட்மின்டன் சங்கம், சிந்து-விற்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக சாய்னா நெவால் அரைஇறுதி போட்டியில் தோல்வி அடைந்தார், இதன் மூலம் இவர் இந்தியாவிற்கான வெண்கலம் பதக்கத்தினை உறுதி செய்தார். தற்போது சிந்து-வின் வெள்ளி பதக்கத்துடன் இந்திய உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளது.