தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் (TNPL 2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


ALSO READ | TNPL 2021: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி


முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினர். கவுசிக் காந்தி 45 ரன்னும், ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் சார்பில் சிலம்பரசன் 2 விக்கெட், ரங்கராஜ் சுதேஷ், விக்னேஷ், ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்து இருந்தார். 


இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 39 ரன்னில் அவுட்டானார்.  திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து இருந்தது. இதனால் சேப்பாக் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். 


LSO READ | TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR