வரும் IPL 2018 தொடங்கி அடுத்த 3 ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர பங்குதாரரக, பிரபல நிதி சேவை நிறுவனம் முத்தூட் பினான்ஸ் ஒப்பந்தமாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து முத்தூட் பினான்ஸ் நிறுவனத்தின் லோகோ, CSK அணி வீரர்களின் ஆடையின் முன்பகுதியில் பதியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து முத்தூட் பினான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் தெரிவிக்கையில், சென்னை அணியின் புகழினை மேலும் ஓங்கும் அளவிற்கு நாங்கள் செயல்படுவோம், சென்னை அணியுடன் இணைந்து நாங்கள் பணியாற்ற இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.


முத்தூட் குடம்பத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவிக்கையில்., சென்னை அணியின் பிராண்ட் மேலும் பிரபலப்படுத்த அனைத்து வேலைகளும் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முத்தூட் பினான்ஸ் நிறுவனம், நகைகளை அடிப்படையாக கொண்டு நிதி வழங்கும் சேவையினை புரிந்து வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகின்றது.