IPL 2019 தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 37-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இதுவரை 9 போட்டிகள் விளையாடி 5-ல் வெற்றி 4-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளது.


இன்றை போட்டியில் டெல்லி அணியில் இருந்து கிறிஸ் மோரிஸ் அல்லது கீமோ பவுளுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தீப் லமிச்சனனின் தேவை அணிக்கு தேவைப்படுவதாக கருதப்படுவதால் இந்த மாற்றம் நிகழாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கோலின் முன்றோ-விற்கு பதிலாக கோலின் இன்கிராமிற்கு வாய்ப்பு அளிக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முஜீப் உர் ரகுமான், மோசிஸ் ஹென்றிகுவிஸ் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர்கள் ஒரு சாத்தியகூறாகவே வைக்கப்பட்டுள்ளனர்.


சொந்த ஊர்களில் விளையாடும் போட்டிகளில் அணியின் வெற்றி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று டெல்லியில் நடைபெறும் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.