தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த லீக் போட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த லீக் நடத்தப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது இந்தாண்டுக்கான தொடர் (TNPL 2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நெல்லை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ராஜாமணி சீனிவாசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார்.விவேக் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.


ALSO READ | TNPL 2021: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி


நெல்லை சார்பில் அதிசயராஜ் 2 விக்கெட்டும், ஹரிஷ், திரிலோக் நாக், சஞ்சய் யாதவ் தலா ஒரு ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் யாதவ் 32 ரன்கள் சேர்த்தார்.


இறுதியில், நெல்லை அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 எடுத்து வெற்றி பெற்றது. நெல்லை அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.


ALSO READ | TNPL கிரிக்கெட் 2021: நெல்லையை வென்றது திருப்பூர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR