புதுடெல்லி: ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளை நோக்கி செல்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி வரவேற்பு தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் மோடியின் பழைய ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பற்றி பேசிய விராட் கோலி,  இந்திய அரசியலில் நான் பார்த்த வரையில் இது மிகச்சிறந்த நடவடிக்கை. நான் பிரதமரை மிகவும் பாராட்டுகிறேன். இந்த நடவடிக்கை என்னை மிகவும் ஈர்த்துள்ளது. 


நான் எனது ராஜ்கோடில் உள்ள ஒரு ஹோட்டல் கட்டணத்தை செலுத்தும் போதுதான் பழைய தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை பற்றி உணர்ந்தேன். மேலும் ரசிகர்களுக்கு அதை கையெழுத்திட்டு வழங்கியிருக்கலாம் என்று கருதினேன் என்று விராட் கோலி பேட்டி அளித்தார்.