உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.


இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அணித்தேர்வு இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை அறிவித்தனர். 


இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ரகானே, எம்.எஸ் தோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், மனிஷ் பாண்டே, ஜஸ்ப்ரித் பும்ரா