ஐதராபாத்: வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது.


முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.


இரு அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. 2000-ம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்காளதேச அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதனால் இந்த போட்டியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது அணி முதலில் பேட்டிங் செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்து வருகிறது.


இந்திய அணி:-  முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிதிமான் சஹா,அஷ்வின், ஜடேஜா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா,


வங்காளதேச அணி:- தமிம் இக்பால், சவுமியா சர்கார், மோமினுல் ஹாக், மஹமுதுல்லா, ஷாகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹீம், சபீர் ரகுமான், மேஹதி ஹாசன், தைஜூல் இஸ்லாம், டஷ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ராபி,


இந்நிலையில் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.