IND vs SL 3rd T20I: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகள் முடிந்துள்ளது. அதன்படி மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா அணி  (India vs Sri Lanka) தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (Shikhar Dhawan) ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 14 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 


ALSO READ | IND vs SL 2nd T20I: கடைசி ஓவரில் ட்விஸ்ட்; இலங்கை அணி வெற்றி


இந்த போட்டியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ரன்கள் எடுத்து இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.


தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த பானுகா 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சமரவிக்ரமா 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து அசால்ட் வெற்றி பெற்றது.


இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.


ALSO READ | இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR