சிட்னியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில்,, ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வென்றதால், ஆஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டித்தொடரை வென்றுவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் ODIயில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. இன்று நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்தியா ODIயை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிட்னியில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா மட்டை வீச தேர்வு செய்தது.  ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்துள்ளது. 390 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி தற்போது பேட்டிங் செய்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்திய அணி 37 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.



முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டித் தொடரில் 1-0 என்ற எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. 



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR