ரிஷப் பந்த் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் சரியாக விளையாடத் தவறினால், இந்திய அணித் தேர்வாளர்கள் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசுகையில், பந்த் குறித்து தேர்வாளர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அணி முன்னேற வேண்டுமா அல்லது வெள்ளை பந்து வடிவங்களில் அவருடன் தொடர வேண்டுமா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார். பல வாய்ப்புகள் கிடைத்தாலும் பந்த் இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்று சோப்ரா கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | உலகக்கோப்பையில் அசத்தும் ஆசிய அணிகள்! உலக இதயங்களை வென்ற ஜப்பான் ரசிகர்கள்


"பந்த் துணை கேப்டனாக பணியாற்ற தேர்வாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தவானின் துணை கேப்டனாக இருப்பதால், தொடரில் அவருக்கு மேலும் இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்து என்ன நடக்கும்? அது ஒரு தீவிரமான கேள்வி. அவர் மோசமாக செயல்படுகிறார், அவரைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. நாம் முன்னேற வேண்டுமா அல்லது அவருடன் தொடர்ந்து செல்ல வேண்டுமா?. எல்லோரும் இப்போது அவரை ஒரு தனித்துவமான வீரராக உணர்கிறார்கள், கூட்டத்தில் இருந்து தனித்து நிற்கும் ஒரு திறமையான வீரர். இருப்பினும், அவர் இது வரை வெள்ளைப் பந்து வடிவத்தில் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்டர்.



டாப் ஆர்டர் பேட்டர்கள் மட்டுமே அவரைப் போல் இன்னிங்ஸ் ஆடியுள்ளனர். அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை நியாயப்படுத்தும் வகையில் ODI மற்றும் T20 போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதும் ஒரு உண்மை. அவர் வரவிருக்கும் வங்காளதேசம் சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக இருந்தாலும், அவர் செயல்படவில்லை என்றால் தேர்வாளர்கள் அவரைப் பற்றி சிந்திக்க வேண்டும்," என்று கூறினார்.  கடந்த 12 மாதங்களாக வெள்ளைப் பந்து வடிவங்களில் பந்த் சீரான ரன் எடுக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை அணியில் ஒரு பகுதியாக இருந்தார், அங்கு அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இது நிபுணர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து விமர்சனத்திற்கு வழிவகுத்தது. பந்த் நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரில் விளையாடினார், அங்கு அவர் இரண்டு போட்டிகளில் 8.50 சராசரியிலும் 94.44 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 17 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்த் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் அதிரடி! முடிவுக்கு வருகிறதா இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ