இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனிக்கிழமை அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் ஷிகார் தவான்(119) மற்றும் ஹார்திக் பாண்டியா(108) இருவரின் சதத்தால் 487 ரன்கள் எடுத்தது ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர். 


பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை அனைத்து இழந்து முதல் இன்னிங்ஸில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவை விட 352 ரன்கள் பின்தங்கி இருந்தது. இதனால் பாலோ-ஆன் ஆனா இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 


இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை தனது இரண்டாம் இன்னிங்க்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, இந்தியாவின் அபார பந்து வீச்சால் தங்கள் விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவை விட 171 ரன்கள் பின்தங்கி உள்ளது இலங்கை. இதனால் இந்தியா 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் திக்வெல்ல 41 ரன்கள் எடுத்தார்.


இந்திய தரப்பில் இரண்டாவது இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டும், முகம்மது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.


இந்த வெற்றி மூலம் இந்திய இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. விராத் தலைமையிலான இந்திய அணி, வெளிநாட்டு மண்ணில் முதன் முறையாக ஒயிட் வாஷ் செய்துள்ளது.