இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு மரபியல் உடற்தகுதி பரிசோதனை (டிஎன்ஏ) நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.


இந்த பரிசோதனை மூலம் வீரர்களின் உடற்தகுதி கண்டறியப்பட்டு அதற்கேற்ற வகையில் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் வீரர்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், உடற்தகுதியுடன் இருப்பதற்கும் இந்த சோதனையால் வழிவகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.