இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது வாழ்க்கை சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். பெண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.


ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டிகளில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்து சென்றவர். சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டவர்.  


தனது வாழ்க்கை மற்றும் தன்னுடன் பயணித்த கிரிக்கெட் பற்றிய மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனவே எனது வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பற்றி சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளேன் எனக் கூறினார்.


மிதாலி ராஜ் பத்ம ஸ்ரீ விருது மற்றும் அர்ஜூனா விருது பெற்றுள்ளார். மேலும் இவரின் வாழ்க்கை பற்றி திரைப்படம் எடுக்க வியாகம்18 மோசன் பிக்சர்ஸ் அதற்கான உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.