நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. 


டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 


இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. 


இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மந்தீப் சிங் மட்டும் அதிரடியாக விளையாடி 46 ரன்கல் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்த அணி 19 ஓவா்களில் 119 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இதனால் பஞ்சாப் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.