10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் போட்டியின் 8வது லீக் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைப்பெற்றது. 


நேற்றைய ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 


முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் முதலாவதாக களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 89 ரன்கள் எடுத்தார்.


இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் ஆம்லா 57 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நடப்பு தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது.