பதினோறாவது ஐ.பி.எல் திருவிழா, ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடருக்கு ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


பதினோறாவது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. 


இதனால், இந்த வருட போட்டிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 6-ம் தேதி தொடக்க விழா நடக்கிறது. முதல் போட்டி 7-ம் தேதி நடக்கிறது. இதில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 27-ம் தேதி கடைசி போட்டி நடக்கிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டி அட்டவணை: