ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், பாருப்பள்ளி காஷ்யப், பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


கொரியா ஓபன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து, ஜப்பான் ஓபன் தொடரிலும் பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். அதேபோல சாய்னா நேவால் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார? எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.