Explanation For Depression and Virat Kohli: விராட் கோலியின் மனநலப் பிரச்சினைகள் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் கூற்றுகள் குறித்து விராட் கோலியின் நிர்வாகக் குழு சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மனநலப் பிரச்சினைகள் எந்த விளையாட்டு வீரருக்கும் சாபக்கேடு என்றும், சர்வதேச அமைப்புகளில் போட்டியிடுபவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு, அத்தகைய சிக்கல்களின் தொடக்கத்தை தவிர்ப்பது கடினம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்திய கிரிக்கெட்டின் ஐகான் விராட் கோலியும் அதற்கு விதிவிலக்கு இல்லை. சமீபத்தில் பல ஆண்டுகளாக மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடும் போது அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசினார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் செய்தியாளர்களிடையே பேசிய விராட் கோலி, அழுத்தமானது தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவித்தார். தன்னை ஆதரிக்கும் நேசிக்கும் நபர்கள் சுற்றியிருந்தாலும் தனிமையாக உணர்ந்ததாக தெரிவித்தார்.  இதுபோன்ற எண்ணம் பலருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


மேலும் படிக்க | லட்சுமண் கொடுத்த 2 ஐடியா; இந்திய அணி அபார வெற்றி


இது ஒரு தீவிரமான பிரச்சினை என்று செய்தியாளர்களிடையே பேசியபோது தெரிவித்த கோலி, அதுபோன்ற சமயங்களில் வலுவாக இருக்க முயற்சி செய்திருப்பதாக தெரிவித்தார்.  


விளையாட்டில் இருந்து ஓய்வெடுத்து விளையாட்டின் அழுத்தங்களில் இருந்து மீண்டு வந்து, நிலையான மனநிலையை அடைவது மிக முக்கியமானது என விராட் தெரிவித்திருந்தார். 


இதையடுத்து, கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து, விராட் கோலியின் விளையாட்டு அழுத்தம் தொடர்பான கருத்துக்கு அவரது நிர்வாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.


மேலும் படிக்க | இந்த வீரரின் வருகையால் பிசிசிஐ-க்கு நெருக்கடி: கேள்விக்குறியாகும் ஆல்ரவுண்டர்களின் இடம்


கோஹ்லியின் முகவர் பன்டி சஜ்தே இது பற்றி விளக்கம் அளித்தார். விராட், தனது தொழில் வாழ்க்கையில் மனநலப் பிரச்சினைகளால் தூண்டப்பட்ட பிரச்சனைகளில் நியாயமான பங்கை எதிர்கொண்டதாக ஒப்புக்கொண்ட பண்டி சஜ்தே, மனச்சோர்வு போன்ற குறிப்பிடத்தக்க சொற்கள் மிகவும் இயல்பாக பயன்படுத்தப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். 


"மனச்சோர்வு போன்ற கடுமையான நிலையின் பிரதிநிதித்துவத்தை விராட் நன்கு புரிந்துகொண்டார். விளையாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவதால் ஏற்படும் மனநல சவால்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசினார், மேலும் அவற்றை ஒப்புக்கொள்வதற்கு அவர் தயங்கவில்லை. அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டுமே மனரீதியான சவால்களை அனுபவித்தார்," என்று சஜ்தே தெரிவித்தார்.


விராட் கோலி உட்பட முன்னணி விளையாட்டு வீரர்களின் ஆழமான பட்டியலை நிர்வகிக்கும் நிறுவனமான கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி, சமீபத்தில் கோஹ்லியின் கருத்து மீதான விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.  


மேலும் படிக்க | பும்ரா போல் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மற்றொரு பந்துவீச்சாளர்


"தன்னை நேசிக்கும் மற்றும் ஆதரிக்கும் நபர்களைச் சுற்றி இருக்கும்போது ஒருவருக்காக விராட் ஒருபோதும் தனிமையாக உணர மாட்டார். அங்குதான் அவருக்கு மன வலிமை கிடைக்கும். சிறந்த விளையாட்டு வீரருக்கு, அவருக்கு இருக்கும் பொறுப்பால் ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பதற்கான மனரீதியான சவால்களைச் சந்தித்திருக்கிறார்கள். மனச்சோர்வு என்பது மிகவும் பெரியது ஆனால், மிகவும் சுலபாக அதை நாம் பயன்படுத்திவிடுகிறோம்" என்று சஜ்தே தெரிவித்தார்.


விராட் கோலி 2019க்கு பிறகு, கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஆனால் ஆசிய கோப்பைக்கான டி20  அணியில் இடம்பெற்றுள்ளார்.


மேலும் படிக்க | கிரிக்கெட் இனி மெல்ல சாகும் - கபில் தேவ் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ