இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 321 ரன்கள் குவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறுது. 


முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.


இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஜேசன் ராய் 65 ரன்களும் பேர்ஸ்டோ 56 ரன்களும் எடுத்தனர். பின்னர், கடைசி நேரத்தில் ஸ்டோக்ஸ் 57 ரன்கள் விளாசினார்.


இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா 2 விக்கெட்டுகள் எடுத்தார். பும்ப்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. 


இந்தியாவுக்கு 322 ரன்கள் என்ற இலக்கு எட்டக்கூடியதாகவே கருதப்படுகிறது.