டெல்லியில் நிலவும் காற்று மாசால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தால் அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை. 


கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.