பிசிசிஐ-யின் நிர்வாகிகள் குழுவிலிருந்து விலகுவதாக ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக, நீதிபதி லோதா தலைமையில் சுப்ரீம் கோர்ட் குழு ஒன்றை அமைத்தது. 


லோதா குழுவின் பரிந்துரையின் பெயரில், ஜனவரி 30-ம் தேதி பிசிசிஐ-க்கு நிர்வாகிகளை சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்தது. அதன்படி, இந்திய அரசின் ஆடிட்டர் வினோத்ராய், பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார். 


மேலும், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் நியமனம் செய்தது.