தமிழகத்தில் 234 இடங்கள் காலியாகுது: அஸ்வின் டிவிட்
தமிழகத்தில் விரைவில் 234 இடங்கள் காலியாக உள்ளதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் விரைவில் 234 இடங்கள் காலியாக உள்ளதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தனது டிவிட்டர் பதிவில்:-
தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது' என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார்.
234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும், என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டுள்ளார்.