காக்காவை அந்தரத்திலேயே வேட்டையாடிய பாம்பு... ஷாக் ஆக்கும் வைரல் வீடியோ

Viral Video Latest: அந்தரத்தில் கம்பத்தில் தொங்கிக்கொண்டே பாம்பு ஒன்று, காகத்தை கொத்தித் தூக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 5, 2024, 08:26 PM IST
  • இந்த வீடியோ X தளத்தில் வைரலாகி வருகிறது.
  • பாம்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகும்.
  • இதை பார்த்து வீடியோ எடுத்த நபர் அதிர்ச்சியில் கூச்சலிடுவது அதில் பதிவாகி உள்ளது.
காக்காவை அந்தரத்திலேயே வேட்டையாடிய பாம்பு... ஷாக் ஆக்கும் வைரல் வீடியோ title=

Viral Video Latest: பாம்பு சற்று ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதற்கு நீங்கள் தீங்கு விளைவித்தால் மட்டுமே மனிதர்களாகிய நம்மை அது சீண்டும் எனவும் பொதுவான நம்பிக்கை ஒன்றும் இருக்கிறது. எனினும், பாம்பை பார்த்த உடன் வரும் பயத்தாலும் அதனால் வரும் பதற்றத்தாலும் நாம் அவற்றை தற்காப்புக்கு என நினைத்துக்கொண்டு தாக்க முற்படுகிறோம். 

பாம்பு, அது விஷ பாம்பாக இருந்தாலும் சரி, விஷமில்லாத மலைப்பாம்பு, நீர் பாம்பாக இருந்தாலும் சரி அவற்றை நீங்கள் சீண்டாமல் இருப்பது அவசியம். அதேபோல், பாம்புகள் தனது இறையை பிடிக்கும் நேரத்தில் நீங்கள் அதனை தொந்தரவு செய்யக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு கோழியை மலைப்பாம்பு முழுங்குகிறது என்றால், அந்த கோழியை காப்பாற்றுகிறேன் என அந்த மலைப்பாம்பை எக்காரணத்தை கொண்டும் தாக்கக் கூடாது. அதன் இரையை அது உண்கிறது. பாம்பிடம் தப்பித்துக்கொள்வது கோழியின் சாமர்த்தியத்தில்தான் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வேட்டையாடிய பாம்பு

அப்படியிருக்க இங்கு ஒரு மலைப்பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு மின்சார கம்பத்தில் கட்டிப் பிணைந்து அந்தரத்தில் ஒரு பாம்பு தொங்கிக்கொண்டிருக்கிறது. பாம்பு தொங்கிக்கொண்டே ஒரு பறவையின் தலையை கவ்விக்கொண்டது. இந்த வீடியோவின்படி அது காகம் என அறியப்படுகிறது. தரைக்கே வராமல் காகத்தை அந்த மலைப்பாம்பு தூக்கிவிட்டது எனலாம். அந்த பறவையை பிடித்து, அதன் கட்டுக்குள் கொண்டுவந்து, மொத்த உடலையையும் பயன்படுத்தி அதனை நெறித்துக் கொல்கிறது அந்த பாம்பு.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? இணையவாசிகளை உருக வைத்த வைரல் வீடியோ

அதனை கம்பத்தின் கீழே நின்றுகொண்டிருக்கும் நபர் வீடியோ எடுத்துள்ளார். மேலும் மலைப்பாம்பு அந்த காகத்தை வேட்டையாடுவதை பார்த்த அந்த நபர் அதிர்ச்சியுற்று அந்த பாம்பை நோக்கி கூச்சல் ஒலி எழுப்புகிறார். மேலும் தங்களது வீட்டின் அருகே உள்ள மின்சார கம்பத்தில் பாம்பு இருக்கிறது என அந்த நபர் தனது தாயாரிடம் சத்தமான குரலில் தெரிவிக்கிறார். மேலும் பாம்பை பார்த்த பயத்திலும், பதற்றத்திலும் ஆபாசமான வார்த்தைகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அந்த பாம்பை நோக்கி அந்த காகத்தை விட்டுவிடும்படியும் கூச்சல் ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கிறார். அத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. 

இயற்கையை தடுக்க நினைக்காதீர்கள்

வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன் கருதி அந்த வீடியோ எடுத்தவர் ஆங்கிலத்தில் பேசிய அந்த பின்னணி குரல் நீக்கப்பட்டு, வேறு பின்னணி இசை இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாம்பு அந்த காகத்தை தனதாக்கிக்கொள்ள எவ்வளவு இருக்கமாக அதனை கொல்கிறது என்பதை பார்க்கவே அச்சம் சில்லிடுகிறது எனலாம். ஆனால், இது இயற்கையான நிகழ்வு. 

மலைப்பாம்பு தனது பசிக்காக பறவையை கொல்வது இயற்கையின் விதிகளில் ஒன்றாக உள்ளது. இதில் அந்த பறவையை காப்பாற்ற போய், நீங்கள் அந்த மலைப்பாம்பை பசியில் வாடச்செய்யலாம் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். அந்த வகையில், இயற்கையான செயல்பாடுகளுக்குள் இடையில் புகுந்துவிடாமல், முடிந்தால் தூரமாக நின்று வேடிக்கை பாருங்கள் இல்லை அந்த இடத்தை காலி செய்யுங்கள். மற்ற என்ன உணவு உண்ண வேண்டும் என நாம் எப்போதுமே சொல்லக்கூடாது என்பதை ஆழமாக மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | முயலை உயிரோடு முழுங்கும் கடல் புறா வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News