இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் போட்டியை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பேருந்து மீது சிலர் கல் எரிந்துள்ளனர். இதனால் அவர்கள் சென்ற பேருந்து கண்ணாடி உடைந்தது.


இதை ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் தனது டிவிட்டரில் படத்துடன் போஸ்ட் செய்துள்ளார்.


ராஞ்சி கிரிக்கெட்டில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும், எங்கள் அணி வீரர்களை, ரசிகர்கள் பாராட்டினர், வரவேற்றனர் என தெரிவித்துள்ளார். 


கல் எரிந்து பேருந்து கண்ணாடி உடைந்ததால், கொஞ்சம் பயமாக உள்ளது. இவ்வாறு டிவிட் செய்துள்ளார்.