IPL 2021 PBKS vs RR: இன்றைய பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி  2 ரன்கள் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 8 புள்ளிகளுடன்  ஐபிஎல் 2021 புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய போட்டியில் டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்ததால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை செய்து 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. 


186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் காட்டிய அதிரடியால், பஞ்சாப் அணி 20 ஓவருக்கு முன்னதாகவே வெற்றி பெற்று விடும் என அனைவரின் எண்ணமாகவே இருந்தது. ஆனால் அந்த கடைசி இரண்டு ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. வெற்றியும் ராஜஸ்தான் அணி வசமானது.


 



அதுவும் கடைசி ஓவரில், நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3வது பந்து மற்றும் 5வது பதில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்த பஞ்சாப் அணி கடைசி பந்தில் வெற்றி பெற மூன்று ரன்கள் எடுத்தாக வேண்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் அவர்களால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.  இதன்மூலம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. 


கடைசி ஓவர் வீசிய கார்த்திக் தியாகி (Kartik Tyagi) நான்கு ஓவர் வீசி இரண்டு விக்கெட்டை எடுத்தார். இந்த இரண்டு விக்கெட்டும் கடைசி ஓவரில் எடுக்கப்பட்டது. அதுவே அணிக்கு வெற்றியை தேடி தந்தது. இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR