தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் ஈரான் சிறையிலிருந்த விடுதலையாகி, தமிழகம் திரும்பியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடித் தொழிலாளிகளாக துபாய் சென்றனர். 2016 டிசம்பர் 15-ம் தேதி,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் ஈரான் கடற்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, ஈரான் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இலங்கைக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறினால், கைது மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் தொடரும்' என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமர வீர பேட்டி அளித்துள்ளார்.   


தற்போது ஈரான் அரசாங்கம் 15 தமிழக மீனவர்களை சிறையில் இருந்த விடுவித்துள்ளது. ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், விமானம் மூலம் இன்று தமிழகம் வந்தடைந்தனர். 


ஷார்ஜாவிலிருந்து 13 மீனவர்கள் சென்னைக்கும், 2 மீனவர்கள் திருச்சிக்கும் வந்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் அவர்களை வரவேற்றனர்.