தமிழகத்தில் 102 தாய் சேய் நல வாகன சேவைக்காக 15 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் புதிய திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவிலான தாய் சேய் நல சேவைக்கான 15 புதிய வாகனங்களை, அவர் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். மேலும் 72 யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் மற்றும் விரிவுரையார்கள் பணிக்கான பணி நியமன ஆணையையும் அவர் வழங்கினார்.