தஞ்சாவூர் அருகே வாளமர் கோட்டை பகுதி வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த் (21). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவி தூரத்து சொந்தம் வகையில் தங்கை முறை என்பதால் இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர். 


ஆனால் ஆனந்த் தனது காதலை விடவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்  சூரக்கோட்டையை பகுதியை சேர்ந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) இது குறித்து கண்டித்துள்ளார். 


மேலும் படிக்க | "அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என் கட்சிக்காரர்?" உனத்கட் ரசிகரின் கேள்வியால் ஷாக்கான நெட்டிசன்கள்


இப்பிரச்சிணை தொடர்பாக நேற்று இரவு வாளமர்கோட்டை கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் நின்று கொண்டிருந்த ஆனந்திடம் உதயகுமார் என் அத்தை மகளை நீ காதலிக்க கூடாது. அவளை விட்டு விலகி விடு என கூறி எச்சரித்துள்ளார். 


அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்தது.


அப்போது ஆத்திரமடைந்த உதயகுமார் மண்வெட்டியால் ஆனந்தின் பின் தலை மற்றும் முகத்தை சிதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். 


இதனால் சம்பவ இடத்திலேயே ஆனந்த் உயிரிழந்துவிட்டார்.  தகவலறிந்த தாலுக்க காவல்துறையினர் உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 


பின்னர் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர்  தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | இந்திய திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR