பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978-லிருந்து 1,18,594 ஆக அதிகரிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 66,571-லிருந்து 71,116 ஆக அதிகரிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,636 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 3,551 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 65 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,616 பேரில் சென்னையில் மட்டும் 1,203 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


READ | தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: EPS


தமிழகத்தில் 96 ஆய்வகங்கள் (அரசு - 50 மற்றும் தனியார் - 46) உள்ளன. அதில், இன்று மட்டும் 36,938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 14 லட்சத்து 13ஆயிரத்து 435 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,180 பேர் ஆண்கள், 1,436 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 72,550 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 46,022 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக உள்ளது.




தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,636 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 45,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,877 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 98 ஆயிரத்து 350 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14 ஆயிரத்து 367 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 


இன்று சென்னையில் 1,203 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 334 பேருக்கும், செங்கல்பட்டில் 87 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 105 பேருக்கும், திருவள்ளூரில் 217 பேருக்கும், தேனியில் 94 பேருக்கும், தூத்துக்குடியில் 141 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


இன்று சென்னையில் 39 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் தலா 8 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், கோவை, தருமபுரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் என 61 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.