தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 1358 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக உயர்வு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 108 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,949 பேரில் சென்னையில் மட்டும் 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 55,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 




தமிழகத்தில் 90 ஆய்வகங்கள் (அரசு - 47 மற்றும் தனியார் - 43) உள்ளன. இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,379 பேர் ஆண்கள், 1,570 பேர் பெண்கள். மொத்தத்தில் கொரோனா பாதித்த, ஆண்களின் எண்ணிக்கை 53,124 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 33,079 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.


READ | 230 சிறப்பு ரயில்களுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு சேவையை திறந்தது ரயில்வே...


இன்று மட்டும் 2,212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 749 ஆக உள்ளது. 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 4,225 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 71 ஆயிரத்து 728 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 62 பேர் உயிரிழந்தனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,141 ஆக அதிகரித்துள்ளது.