சென்னையில் 1,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 4,086 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 145 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,231 பேரில் சென்னையில் மட்டும் 1,216 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 100 ஆய்வகங்கள் (அரசு - 53 மற்றும் தனியார் - 47) உள்ளன. அதில், இன்று மட்டும் 42,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 14 லட்சத்து 91 ஆயிரத்து 783 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா வைரஸ் உறுதியானவர்களில், 2,544 பேர் ஆண்கள், 1,687 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 77,386 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 49,173 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக உள்ளது.




தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,483 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 6,277 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,04,970 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 ஆயிரத்து 334 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


READ | சென்னையில் 16 லட்சம் மதிப்புள்ள ‘Frosch’ ‘Lamborghini’ போதை மாத்திரை பறிமுதல்


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 


சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பை விட குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 1,216 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 364 பேருக்கும், விருதுநகரில் 289 பேருக்கும், மதுரையில் 262 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும், தூத்துக்குடியில் 196 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


இன்று சென்னையில் 23 பேரும், மதுரையில் 9 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 6 பேரும், ராமநாதபுரத்தில் 5 பேரும், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் தலா 2 பேரும், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலத்தில் தலா ஒருவரும் என 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.