தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 2214 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 60,592 ஆக உயர்வு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 4,180 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 100 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,280 பேரில் சென்னையில் மட்டும் 1,842 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 66,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 



தமிழகத்தில் 94 ஆய்வகங்கள் (அரசு - 49 மற்றும் தனியார் - 45) உள்ளன. அதில், இன்று மட்டும் 36,164 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 13 லட்சத்து 06 ஆயிரத்து 884  மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,588பேர் ஆண்கள், 1,692 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 65,604 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 41,375ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 2,214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 592 ஆக உள்ளது.


READ | சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ICMR


இன்று மட்டும் 2,214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்துள்ளனர். தமிழகத்தில், மொத்தம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 60,592 ஆக உள்ளது. அதில், 112 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,277 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 88 ஆயிரத்து 847 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 ஆயிரத்து 877பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,450 ஆக அதிகரித்துள்ளது.