சென்னையில் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 4,930 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 65 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,985 பேரில் சென்னையில் மட்டும் 1,298 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 112 ஆய்வகங்கள் (அரசு - 57 மற்றும் தனியார் - 55) உள்ளன. அதில், இன்று மட்டும் 52,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 19,84,579 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில்,  2,921 பேர் ஆண்கள். 2,064 பேர் பெண்கள். மொத்தமாக 79,482 ஆண்களும், 50,657 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று மட்டும் 3,861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,776 ஆக உள்ளது.




தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 70 பேர் உயிரிழந்தனர். அதில், 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 49 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,551 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,348 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 8,776 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,45,220 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 ஆயிரத்து 682 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Also read | Corona: இந்த நகரங்களில் முழு ஊரடங்கு மீண்டும் தொடங்கம், வீதியை மீறுபவர்கள் மீது FIR பதிவு


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 


இன்று சென்னையில் 1,298 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 434 பேருக்கும், செங்கல்பட்டில் 354 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கும், தூத்துக்குடியில் 200 பேருக்கும், திருநெல்வேலியில் 180 பேருக்கும், விருதுநகரில் 169 பேருக்கும், திருவண்ணாமலையில் 151 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


இன்று சென்னையில் 22 பேரும், திருவள்ளூரில் 9 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், மதுரையில் 5 பேரும், திருச்சியில் 4 பேரும், காஞ்சிபுரம், புதுக்கோட்டையில் 3 பேரும், கோவை, ராமநாதபுரத்தில் 2 பேரும், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 70 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.