திருச்சி: திருச்சி துறையூர் அருகே நடந்த வெடி விபத்தில், 19 பேர் உயிர் இழந்த வழக்கில், வெடிமருந்து தொழிற்சாலையின் இயக்குநர் உட்பட, ஐந்து பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் டிசம்பர் 1-ம் தேதி திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் உயிர் இழந்தனர். 


இந்நிலையில் இந்த வெடி விபத்து குறித்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.