சென்னை : தற்போதெல்லாம் சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை விட அவர்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதை தான் பலரும் குறிக்கோளாக வைத்துள்ளனர்.  இதனால் சரியான நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர்!


இவ்வாறு நடப்பதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது இதுபோன்ற சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு பரிசாக ரூ.5000 வழங்கப்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் முக்கிய நோக்கமே சாலை விபத்தால் உயிருக்கு போராடும் நபர்களை அவசர கால உதவியாக பொதுமக்கள் முன்வந்து உதவ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பரிசு தொகையானது உதவி செய்யும் நபருக்கு ஒரு ஆண்டில் 5 முறை இந்த பரிசு தொகை வழங்கப்படும்.



சாலையில் விபத்து நடந்த இடத்தினை காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர், விபத்தின் நிலை பற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் அளிப்பார்.  அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் ' மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ' இதனை மதிப்பீடு செய்ததை தொடர்ந்து, உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் சேர்ந்தவருக்கு பரிசுத்தொகை ரூ.5000 வழங்கும்படி தமிழக போக்குவரத்துக்கு ஆணையருக்கு தகவல் அனுப்பப்பட்டு, அதன்படி குறிப்பிட்ட நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.


ALSO READ யானை விபத்து; லோகோ பைலட்டுகளை கைது செய்தால் போராட்டம் - எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR