சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து பல அறிக்கைகளை தேர்தல ஆணையம் தெரிவித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் முன் அனுமதி பெறாமல் வரும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை வெளியிதிருந்தது. 


இந்த உத்தரவின் அடிப்படையில், அனுமதியின்றி ஆர்.கே.நகர் தொகுதிக்குள் சென்ற வெளியூர் பதிவெண் கொண்ட 52 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 


பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆர்.கே நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.